Jump to content

User talk:Rimzanms

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

This is an old revision of this page, as edited by Rimzanms (talk | contribs) at 23:09, 20 July 2012 (→‎Speedy deletion nomination of Mohamed Rimzan). The present address (URL) is a permanent link to this revision, which may differ significantly from the current revision.

கஹட்டோவிட்ட வரலாறு

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கிராமமே கஹட்டோவிட்ட. இது நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல பாதையில் நிட்டம்புவ நகரில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்ட ஊடாக அத்தனகலு ஓயா ஓடுவது இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய வெகுசில ஊர்களில் இதுவும் ஒன்று. நாடளாவிய ரீதியில் கல்வி  உயர்அரச பதவிகள்  மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் மிகவும் பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது.
 கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் மிகவும் பொருத்தமானதாக இதனைக் குறிப்பிடலாம். இந்த ஊரின் ஊடாகச் செல்லும் ஆற்றங்கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றௌரம் என்பதற்கு சிங்களத்தில் ஒயிட்டி என்றும் தேயிலைக்கு கஹட்ட என்றும் வழங்குவதன் காரணமாகவே கஹட்டோவிட்ட என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட சுமார் 400 வருட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன.
கிறிஸ்துக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்றகரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள்  இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து அவர்களை விரட்டிவிட்டு வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன்  முஸ்லிம்களுக்கு உதவிபுரியமுன்வந்தாலும் கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி முஸ்லிம்களைத் கரையோரங்களில் இருந்து துரத்தினான். ஈற்றில் போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கையால் நீர்நிலைகளை அண்டிய நாட்டின் உட்பகுதிக்குச் சென்று முஸ்லிம்கள் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றார்கள்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் பிரதான ஒரு இடமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம் மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் மல்வானை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இப்போரில் மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால் அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள் களனி ஆற்று வழியே  ஹங்வெல்ல,  பூகொட பிரதேசங்களுக்கு வந்து பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.
கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
அத்தனகல்லை பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க அட்டுலுகம இலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். இச்சந்தர்ப்;பத்தில் முஹம்மத் காஸிம் என்பவரை அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர் கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி பல்வேறு இடங்களிலிருந்தும் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
கஹட்டோவிட்டாவுக்கு அறபு நாடுகளிலிருந்து மார்க்க போதனைக்காக இருவர் வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கிருக்காவிட்டாலும் ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இவ்விரு தக்கியாக்கள் கட்டப்பட்டன.
இதன் பின்னர் 1792 இல் இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல் கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில் சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள பெரிய பள்ளிவாசல் கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில் 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். 1970 இல் கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் முஹியுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.
இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக 1974 இல் மஸஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டது. தற்போது ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை தளமாகக் கொண்டு இயங்கிவந்தன. பின்னர் 1920 இல் அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. தற்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இது இயங்கிவருகின்றது.
அடுத்து பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் 3 பாடசாலைகள் செயற்பட்டுவருகின்றன.
கஹட்டோவிட்ட சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருவருகின்றது. உதவித் தேர்தல் ஆணையாளார், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் ,  ஊடகத்துறை  போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து பல ஆலிம்கள் தொண்டாற்றி வருகின்றனர்.
இவை தவிற 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1980 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபளிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.

தொகுப்பு ஹிஷாம் றாஸிக்