User:Pavanan N
பிறவி
பிறவி என்பது ஒரு சாபக்கேடு! ஏன்?
ஏணெனில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு வகையில் சபிக்கப்பட்ட பிறவிகளாக இருக்கும்.பிறப்பு முதல் இறப்பு வரை ஏதோ ஒரு வழியில், ஏதோ ஒரு வகையில் அடிமையாக இருக்க பணிக்கப்படும்.
ஒரு ஜனனம் என்பது இறைநம்பிக்கை உடையவர்களுக்கு ஒரு விதமாகவும்,சாதாரண அடிப்படை அறிவு அற்றவர்களுக்கு மிக மோசமாகவும் , அதிர்ஷ்டம் அல்லது சூழ்ச்சிகள் தெரிந்தவர்களுக்கு சொர்கமாகவும் உள்ளது.
இங்கு தொழில்நுட்பம் என்பது பன்னெடுங்காலமாக மனித இனத்தின் தொண்மைக்கு கிடைத்த பரிசாக செல்வந்தர்களின் பொழுதுபோக்காக உள்ளது.இதனால் வறுமை ஒழியவில்லை மாற்றாக பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது.
எனவே பிறவி என்பது நாம் நமது அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் நாம் செய்த தவறாக இருக்கலாம். அல்லது நாம் ஒரு ஒட்டுண்ணி என்பதன் அடையாளமாக இருக்கலாம். இந்த பிறவியில் பல இடங்களில் பல வடிவங்களில் நாம் நம்மை மறைத்துக்கொள்கிறம் நம்மை பாதுக்கப்பதாக நினைத்து பலவற்றை அழிக்கிறோம். பிறவியின் முழு அர்த்தம் என்பது ஜென்ம சாபம் அல்லது இறை தண்டனை ஆகும்.
பிறப்பெடுக்கும் ஒரு உயிர் வளர வேண்டும், வாழ வேண்டும், தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்,பிறகு வயது எனும் ஒற்றை சொல்லில் மூப்படைந்து உயிர் துறக்க வேண்டும்.இதுவே நியதி அல்லது காலம். ஆனால் பிறக்கும் உயிர்களுக்கு அனைத்தயும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இருந்தாலும், தான் யார் என்பதை அறிய முடியாது, காரணம் நாம் உடல் எனும் எந்திரத்தில் அடைபட்டு இருக்கிறோம்.
உண்மையில் உடல் என்பது ஒரு செயற்கை செறிவூட்டப்பட்ட இயற்கை கருவி,இந்த கருவியில் மூல ஆதாரமாக உயிர் எனும் எரிபொருள் சேர்க்கப்படுகிறது, இந்த எரிபொருள் தன்னை ஒரு உயிர் என நினைத்த வண்ணம் உடலானது தான் எண்ணியதை செய்து முடித்து இருதியில் மாய்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன்? யார் யாரை கட்டுப்படுத்துகிறது?
இந்த கேள்விகளுக்கு பதில் நாம்தான்.நாம் நம்மை அறிய வேண்டும்.அதற்கு இந்த உடலின் இயக்கங்களை ஆராய வேண்டும்.
வரலாற்று நூல்கள் பலவும் பலவித நம்ப முடியாத ஆய்வுகளை விட்டுசென்றுள்ளன. அதன்படி பார்த்தால் ஒன்று புலப்படும். மனித உடலும் உயிரும் பிறவி எனும் ஒற்றை எழுத்தில் அடங்கும்.